நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015

உனக்கான கவிதை என்று 
நினைத்தாலே போதுமே
எழுத்துக்கள் அழகாக அலங்கரித்து
ஒவ்வொரு கவிதை படியிலும் 
நின்று  சிரித்துக்காட்டுகிறது

கொலு பொம்மைகள் போல

என் கவிதையை படிக்கும்படி ஒரு நாள்
உன் அருகில் நான் ஆவலுடன்

குழல் யாழ் போல்
மழலையாக ஒவ்வொரு எழுத்தாக 
வாசித்த வரிகளுக்கு
உயிர் கொடுக்கும்
உன் தமிழும் அழகு தான்

என் புது கவிதை உலகத்தில்

" பெண்ணே.. என் கண்ணே.. செந்தேனே.. " - என்று 
என்றும் முனுமுனுக்கும்
உன் மலரிலிருந்து 
உதிரும்
என் பெயரும் 
ஒரு பாடலாக தான் கேட்கிறது..
சில்லென்ற மரங்களின் காற்றில்
பெருநகரத்தின் ஜொலிக்கும்  ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும் கூட்டத்திலும்
மயங்கும் இருட்டிலும்

ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று

அனைத்து காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது போல் ஒரு உணர்வு

த்தருணம் போதுமே
எனக்கான நம் கவிதை உலகம் உயிர் வாழ



ஒவ்வொரு வருடமும்
மறுபடியும் பிறக்க நினைக்கிறன்
பல நாள் கழித்து நீ வாழ்த்தும்

எனக்கான மகிழ்ச்சியான பிறந்த நாளில்


பேசணும்னு தான்  நினைப்பேன் "
என்று நீ சொன்னதும்
" கவிதை எழுதட்டுமா " என்று கேட்டது
அந்த ஒரு நிமிட நிசப்தம்

கவிதையே பேசுவது என்று புரியாமல் 

சுற்றிலும் ஆயிரம் பேர் - ஏனோ
ஆளில்லா தீவில் இருந்தது போல்
சில நொடிகளாக சென்ற பலமணி நேரத்தில்
கொஞ்சமாக தான்
மௌனத்திலும்
பார்வையிலும்
சிரிப்பிலும்
பேசிகொண்டோம்
உன் கண்மணிகள்
தேடின மக்கள் அலையில்
என் கண்களை கண்டதும்
உன் பெருமூச்சு அனுப்பிய கவிதை மடலை
கண்டுகொண்டேன் நானும் கண்டுகொண்டேன்

சிந்திய சோறும் கவிதை எழுதும்
- நீ உண்ணும் அழகில்

மயங்கினேன் நானும் .. !!

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!



என் பிதற்றலை ரசித்து
சிதறும் உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை விழுங்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும் என் காதணியை கவர்ந்து
கண்மணியால் மயக்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய் பிதற்றி கொண்ட நாட்களில்
  
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!





கண்ணில் ஒரு அருவியுமாய்
மனசில் ஒரு பாசுமுமாய்
உதட்டில் ஒரு மலருமாய்
சிரித்து பிதற்றிய நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!



 உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை

கடிகார முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!