NKarikalan
நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Thursday, November 5, 2015
சில்லென்ற
மரங்களின் காற்றில்
பெருநகரத்தின்
ஜொலிக்கும் ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும்
கூட்டத்திலும்
மயங்கும்
இருட்டிலும்
ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று
அனைத்து
காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது
போல் ஒரு உணர்வு
அத்தருணம் போதுமே
எனக்கான
நம் கவிதை உலகம் உயிர்
வாழ
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!
என் பிதற்றலை ரசித்து
சிதறும்
உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை
விழுங்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும்
என் காதணியை கவர்ந்து
கண்மணியால்
மயக்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய்
பிதற்றி கொண்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
கண்ணில்
ஒரு அருவியுமாய்
மனசில்
ஒரு பாசுமுமாய்
உதட்டில்
ஒரு மலருமாய்
சிரித்து
பிதற்றிய நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை
கடிகார
முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு
வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த
நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
Subscribe to:
Posts (Atom)